2012-08-28 15:04:36

புனே ஆயர் : வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்கள் அர்த்தமற்றவை


ஆக.28,2012. வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்கள் அர்த்தமற்றவை மற்றும் இவை மத உணர்வுகளுக்கு எதிரானவை என்று புனே ஆயர் Thomas Dabre குறை கூறினார்.
“உலகம் ஒரே குடும்பம்” என்ற (Vasudhaiva Kutumbakam) ஓர் இந்து அரசு-சாரா அமைப்பு நடத்திய பல்சமயக் கூட்டத்தில் பேசிய ஆயர் Dabre, பழிவாங்குவதும், அதற்குப் பதிலடி கொடுப்பதும் மேலும் அதிகப் பதட்டநிலைகளையே உருவாக்கும், மாறாக, மன்னிப்பும் அன்பும் காயங்களைக் குணப்படுத்தும் என்று கூறினார்.
வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்களால் புனே நகருக்கு மக்கள் பெருமளவில் வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
இன்று மக்களிடம் போதுமான அன்பும் மன்னிப்பு உணர்வும் இல்லை என்றும், இப்பண்புகளே கலவரத்தால் பாதிக்கப்படும் பல்வேறு சமயத்தவரை ஒன்று சேர்க்கும் என்றும் புனே ஆயர் தெரிவித்தார்.
அசாமின் நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இன மோதல்களில் 88 பேர் இறந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.