எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து குறித்து வெனெசுவேலா ஆயர்கள் வேதனை
ஆக.28,2012. வெனெசுவேலா நாட்டின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து
குறித்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ள வெனெசுவேலா ஆயர்கள் துயருறும் மக்களுடன் தங்களது
ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், அந்நாட்டில்
3 நாள்களுக்கு தேசிய துக்க தினத்தைக் கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்
அரசுத் தலைவர் Hugo Chavez. நல்லவேளையாக இந்தக் கொடூரமான சம்பவம் கட்டுப்படுத்தப்பட்டு
விட்டது' என்று கூறியுள்ள அரசுத் தலைவர், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான
விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். வெனெசுவேலாவில் 40 இலட்சம் பீப்பாய் எரிவாயும் பெட்ரோலியமும்
சேமிப்பில் இருப்பதாகவும், தொடர்ந்து ஒரு நாளைக்கு 7,35,000 பீப்பாய்கள் வீதம் இவை உற்பத்தி
செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. வெனெசுவேலாவின் எண்ணெய்த்துறை அமைச்சர் இரஃபேல்
ரமிரெஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆலையில் உள்ள ஒரு குழாயில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவால்
தீ விபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.