டில்லியில் நாள் ஒன்றுக்கு 12 குழந்தைகள் காணாமல் போகின்றன
ஆக.27,2012. டில்லியில் நாள் ஒன்றுக்கு 12 குழந்தைகள் காணாமல் போகின்றன எனவும், இதில்,
பெண் குழந்தைகளே அதிகம் எனவும், அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டில்லியில்,
இந்த ஆண்டு, இம்மாதம் 15ம் தேதி வரை, 1,652 பெண் குழந்தைகள் உட்பட 3,171 குழந்தைகள் காணாமல்
போயுள்ளன எனக்கூறும் அரசின் அறிக்கை, இது கடந்த ஆண்டை விட குறைவே எனவும் தெரிவிக்கிறது. இந்த
ஆண்டு, நாள் ஒன்றுக்கு, 12 குழந்தைகள் காணாமல் போயுள்ள நிலையில், இது 2011ம் ஆண்டில்,
நாள் ஒன்றுக்கு, 14 குழந்தைகள் என இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆண் குழந்தைகளை
விட, பெண் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது எனவும், சிலரால் தவறாக வழிகாட்டப்படுவது,
பெற்றோர்கள் அன்பாக நடந்து கொள்ளாதது, படிப்பில் நாட்டம் இல்லாமை, கடத்தப்படுவது போன்றவை,
குழந்தைகள் காணாமல் போவதற்கானக் காரணங்களாக, புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.