2012-08-25 15:25:31

இங்கிலாந்தில் 8வது உலக இளம் கிறிஸ்தவத் தொழிலாளர் மாநாடு


ஆக.25,2012. “வாழ்க்கையின் ஒரு பள்ளியைக் கட்டியெழுப்பு” என்ற தலைப்பில் இங்கிலாந்தின் Altonல் இச்சனிக்கிழமையன்று 8வது உலக இளம் கிறிஸ்தவத் தொழிலாளர் மாநாடு தொடங்கியுள்ளது.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில் இளம் தொழிலாளர்கள், மாணவர்கள், வேலையின்றி இருக்கும் இளையோர் என ஏறக்குறைய 50 நாடுகளிலிருந்து இளையோர் கலந்து கொள்கின்றனர்.
இன்றைய இளையோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பன்னாட்டினரின் கவனத்துக்குக் கொண்டு வரவும், இவர்களின் பிரச்சனைகளுக்குத் திருஅவை எவ்வாறு பதில் சொல்கிறது என்பதை அறியவும் இம்மாநாட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள 8வது உலக இளம் கிறிஸ்தவத் தொழிலாளர் மாநாடு, வருகிற செப்டம்பர் 5ம் தேதி நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.