2012-08-24 17:20:36

தென்னாப்ரிக்காவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்


ஆக.24,2012. தென்னாப்ரிக்காவில் மேலும் வன்முறைகள் இடம்பெறாமலிருப்பதற்கு உரையாடலை ஊக்குவிக்குமாறு அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள் அரசை கேட்டுள்ளனர்.
தென்னாப்ரிக்காவில் கடந்த வாரத்தில் கொல்லப்பட்ட Marikana நகர் பவளச் சுரங்கத் தொழிலாளர்கள் நினைவாகத் திருப்பலி நிகழ்த்திய Durban பேராயர் கர்தினால் Wilfrid Napier, காவல்துறையால் இத்தகைய வன்முறைச் செயல்கள் இனிமேல் நடக்காது என்று நம்பியிருந்த இக்காலக்கட்டத்தில் இக்கொலைகள் நடந்திருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது என்று கூறினார்.
இந்நினைவு நாளில் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Napier, மக்கள் வருத்தமும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
1960களில் Sharpeville நகரத்தில் காவல்துறையால் 60 பேர் கொல்லப்பட்டதையும் கர்தினால் நினைவுகூர்ந்தார்.
கடந்த வாரத்தில் தென்னாப்ரிக்காவில் ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய பவளச் சுரங்கத் தொழிலாளர்மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 34 பேர் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.