2012-08-23 16:11:42

உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் 4 இந்தியப் பெண்கள்


ஆக.23,2012. உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் முதலிடத்தையும், இவரைத் தொடர்ந்து அமெரிக்கா அரசுத்தலைவரின் மனைவி மிச்செல் ஒபாமா, அயல்நாட்டு உறவுகள் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் ஆகியோரும் குறிப்பிட்ட இடங்களை பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிரபல Forbes, நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் அரசியல், பொருளாதாரம் ஆகியத் துறைகளில் சக்தி மிகுந்தவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சார்பில், காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா காந்தி 6வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, (Indra Nooyi), ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சாந்தா கோச்சர் (Chanda Kochhar) உட்பட மேலும் 4 இந்தியப் பெண்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மியான்மார் அரசில் மாற்றங்கள் உருவாகக் காரணமானவரும், நொபெல் அமைதி விருதைப் பெற்றவருமான Aung San Suu Kyi, இப்பட்டியலில் 19வது இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.