2012-08-22 16:04:43

சோமாலியாவில் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு – Djibouti ஆயர்


ஆக.22,2012. கடந்த 21 ஆண்டுகள் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருந்த சோமாலியாவில் இத்திங்களன்று அந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்துள்ளது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று Djiboutiன் ஆயரும், Mogadishu மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான Giorgio Bertin கூறினார்.
சோமாலியாவில் உள்ள 135 பழங்குடி இனங்களின் தலைவர்களால் தெரிவு செய்யப்பட 275 பிரதிநிதிகள் இத்திங்களன்று Mogadishu விமான நிலையத்தில் சந்தித்ததைப் பற்றி கருத்து தெரிவித்த ஆயர் Bertin, இச்சந்திப்பு நம்பிக்கை தரும் ஒரு முயற்சி என்று குறிப்பிட்டார்.
பாதுகாப்புக் காரணங்களால் சோமாலியாவின் பாராளுமன்றம் 2000ம் ஆண்டு Djiboutiயிலும், 2004ம் ஆண்டு கென்யாவிலும் சந்திக்க வேண்டியிருந்தது. இவ்வாண்டு முதன் முறையாக அந்நாட்டின் பாராளுமன்றம் Mogadishuவில் சந்தித்துள்ளது.
இச்சந்திப்பு ஒரு முன்னேற்றம் என்றாலும், சோமாலியாவின் பயணம் இன்னும் பல காதங்கள் செல்லவேண்டியுள்ளது என்று ஆயர் Bertin சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.