"இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மனித முகம்" விருது பெற்ற செய்தியாளர் Kaiserன்
உரைகள்
ஆக.22,2012. அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டிற்குகந்த ஒரு தயாரிப்பாக,
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்போது Time மாதஇதழின் செய்தியாளராகப் பணியாற்றி விருதுகள்
பெற்ற Robert Blair Kaiser இந்தியாவின் பல இடங்களில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்
தொடர்புத்துறை எழுத்தாளராகப் புகழ்பெற்ற இயேசு சபை அருள்தந்தை Gaston Roberge அவர்களும்,
SIGNIS அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சியில், "இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின்
மனித முகம்" என்ற தலைப்பில் Kaiser உரைகள் நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது. பல்வேறு
மதங்களையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்ட இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் எண்ணங்களுக்கு
ஏற்ப, Kaiser தன் உரைகளை பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கும் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்
மாதம் 13ம் தேதி இந்தியாவை அடையும் Kaiser, டார்ஜீலிங், குவஹாத்தி, ஷில்லாங், மும்பை,
பூனே, புதுடில்லி ஆகிய பல இடங்களில் அக்டோபர் மாதம் 4ம் தேதி முடிய உரையாற்றுவார்.