ஆக.17,2012. விண்ணேற்பு அடைந்துள்ள நமது அன்னை மரியாவைக் குறித்து மகிழும் நாம், அந்த
அன்னைக்கு தகுந்ததொரு பேராலயம் கட்டப்பட்டால், நமது மகிழ்வு இன்னும் பல மடங்காக உயரும்
என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார். இப்புதனன்று அன்னைமரியாவின் விண்ணேற்புத்
திருநாளைக் கொண்டாட வியட்நாமின் La Vang என்ற மரியன்னைத் திருத்தலத்தில் கூடியிருந்த
பல்லாயிரம் விசுவாசிகளுக்குத் வியட்நாம் நாட்டுக்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்புத் தூதர்
பேராயர் Leopoldo Girelli திருப்பலி நிறைவேற்றியபோது இவ்வாறு கூறினார். வியட்நாமின்
பல்வேறு மறைமாவட்டங்களின் பேராயர்கள், ஆயர்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டுத் திருப்பலியின்
இறுதியில், அத்திருத்தலத்தில் புதியதொரு பேராலயம் கட்டப்படுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பேராலயம்
கட்டப்படும் அதே வேளையில், வியட்நாமில் மதச் சுதந்திரத்துடன் தலத் திருஅவையும் செழித்து
வளர வேண்டிக்கொள்வது நமது கடமை என்று பேராயர் Girelli தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.