2012-08-16 15:31:35

எச்.ஜ.வி நோயிலிருந்து குறைந்த விலையில் இனி விடுதலை பெறலாம்


ஆக.16,2012. Switzerland நாட்டில் உள்ள பேசல் (Basel) பல்கழைக்கழகம் எச்.ஜ.வி (HIV) நோய் குறித்து மேற்கொண்ட ஆய்வில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய மருந்துக்களை நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்துவதால், 90 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 16,000 நோயாளிகளில், மதுவுக்கும், போதைக்கும் அடிமையானவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் என எச்.ஜ.வி நோயுடன் சேர்த்து மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு, முற்றிலும் எச்.ஜ.வி நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 1957 பேர் மட்டுமே ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்டனர்.
ஆய்வின் முடிவில், அனைத்து நோயாளிகளும் 90 விழுக்காடு குணமடைந்திருப்பதாக அனைத்துலக மருத்துவக் காப்பகம் இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிக விலை கொடுத்து வாங்கும் மருந்துக்களின் அதே பலனை பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய இந்த மருந்துக்கள் குறைந்த விலையில் தருகின்றன என்றும், இதனால் அனைத்து வகுப்பினராலும் மருந்துகளை வாங்கவும் நோயிலிருந்து குணமடையவும் இந்த ஆய்வு உதவுகிறது என்றும் ஆய்வின் தலைவர் Manuel Battegay தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.