2012-08-16 15:14:29

ஆக.16,2012. கவிதைக் கனவுகள் – எனது நாடே விழித்தெழுக (கீதாஞ்சலியிலிருந்து)


எங்கே மனம் அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ,

குறுகிய சாதி சமயப் பிளவுகளால்
எங்கே உலகம் உடையாமல் இருக்கிறதோ,
எங்கே உண்மையின் அடியாழத்திலிருந்து
சொற்கள் உதிக்கின்றனவோ,

எங்கே தளராத முயற்சி
பூரணத்தை நோக்கி கரங்களை நீட்டுகிறதோ,
தெளிந்த பகுத்தறிவு நீரோடை
மூடப் பழக்கம் வழக்கப் பாலை மணலில்
பாய்ந்து வற்றாமல் எங்கே இருக்கிறதோ

என்றென்றும் விரிந்து செல்லும்
எண்ணத்தை, செயலை நோக்கி
என் இதயத்தை
எங்கே உன்னருள் வழிநடத்திச் செல்கிறதோ

அந்தச் சுதந்திரச் சுவர்க்கத்தில்
என் தந்தையே!
எனது நாடு விழித்தெழுவதாக!








All the contents on this site are copyrighted ©.