2012-08-14 17:01:56

இஸ்பெயினின் பல்வேறு நகர்களில் வாழ்வுக்கு ஆதரவான பேரணிகள்


ஆக.14,2012. வாழ்வுக்கு ஆதரவான 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து அக்டோபர் மாதத்தில் இஸ்பெயினின் பல்வேறு நகர்களில் பேரணிகளை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்பெயின் நாட்டில் கருக்கலைத்தல்களை அனுமதிக்கும் சட்டம் திருப்பப் பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர் 7ம் தேதி தலைநகர் மத்ரித்திலும் அந்நாட்டின் ஏனைய 60 நகர்களிலும் 'வாழ்வதற்கான உரிமை' என்ற கோரிக்கையுடன் பேரணிகள் நடத்தப்பட உள்ளன.
இஸ்பெயின் நகர்களிலும் உலகம் முழுவதும் உள்ள இஸ்பானிய தூதரகங்களின் முன்னிலையிலும் இப்பேரணிகள் அக்டோபர் மாதம் 7ம் தேதி நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.