கடல்பகுதிகளைக் காப்பதற்கான ஐ.நா.வின் புதிய திட்டம்
ஆக.13,2012. உலகில் கடல் பகுதிகளையும் அதை நம்பியிருக்கும் மக்களையும் காப்பாற்றும் நோக்கில்
புதிய திட்டம் ஒன்றை இஞ்ஞாயிறன்று தென்கொரியாவில் துவக்கிவைத்தார் ஐ.நா. பொதுச்செயலர்
பான் கி மூன். கடல் சட்டம் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், கையெழுத்திற்கு அழைப்பு விடப்பட்டதன்
30ம் ஆண்டை சிறப்பிக்கும் விழாவில் தென்கொரியாவின் Yeosu நகரில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலர்,
பல்வேறு வளங்களைக் கொண்டிருக்கும் கடல் இன்று எதிர்நோக்கி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து
தன் கவலையை வெளியிட்டார். கடல் சார்ந்த சட்டங்களை அமல்படுத்துவதைப் பலப்படுத்துவது
மற்றும் அதற்கு ஆதரவளிப்பது தொடர்புடைய இசைவு இன்றைய சூழலில் மிகவும் அவசியம் என்ற ஐ.நா.
பொதுச்செயலர் பான் கி மூன், 1982ம் ஆண்டு கையெழுத்திற்கென முன்வைக்கப்பட்ட ஒப்பந்தம்
இதுவரை 161 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அவையின் ஆதரவைப் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.