2012-08-13 16:07:44

ஆகஸ்ட் 13,2012 கவிதைக் கனவுகள் - இளைஞனே...


தமிழ்நண்பர்கள் இணையபக்கக் கவிதைகள்

இளைஞனே...
முகத்தில் கண்ணில்லா எறும்புகளே
முகர்ந்து கொண்டே
முன்னோக்கி சென்று
உறுதியோடு
உழைத்துக்கொண்டிருக்கிறது!
பார்வையிருந்தும்
பாதையைத் தேடாமல் நீ!
பயணத்தை தொடங்குவது எப்போது ?
வானம் வந்துனக்காய்
வளைந்து கொடுக்காது!
முயன்றால் நீ
வானளவு உயர்ந்து நிற்கலாம் !!

இளைஞனே...
சொல்வது எளிதே செய்வது கடிதே
என்று சொல்கிறாயா?
கையிலே பணமில்லை
வேலையோ சரியில்லை
மனதிலே உறுதியில்லை
எப்படி நான் வாழ்வேன்?
இப்படித்தான் உன்னைப்போல்
பலரிங்கு வருந்துகிறார்கள்.
அசையாமல் ஓரிடத்தில்
அமர்ந்து கொண்டே நீயிருந்தால்
வசை பாடும் இவ்வுலகம்
உன்னையும்தான் வாட்டிவிடும்
எதுவந்தால் உனக்கென்ன?
அறிவுடையோன் அஞ்சுவானா?








All the contents on this site are copyrighted ©.