2012-08-11 16:49:41

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு 67 இரயில்கள்:திருச்சி கோட்ட மேலாளர் தகவல்


ஆக.11,2012. இந்தியாவின் முக்கியப்பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி திருவிழாவிற்கு திருவாரூர் வழியாக 67 இரயில்கள் முதல் முறையாக இந்த ஆண்டு இயக்கப்பட உள்ளது என்று திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் தெரிவித்தார்.
வேளாங்கண்ணி திருவிழா இம்மாதம் 28ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கும் நிலையில், இப்பகுதிக்குப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல வசதியாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து முதல் முறையாக 67 இரயில்கள் இயக்கப்பட உள்ளன என பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்த திருச்சி கோட்ட இரயில்வே பொது மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன், அத்துடன் திருச்சியில் இருந்து சோதனை ஓட்டமாக இரயில்கள் இயக்கப்படும் என்றும், நாகூர்- சென்னைக்கு கம்பன் இரயில் அக்டோபர் மாதம் 11ம் தேதியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.