2012-08-11 16:52:45

தென் சூடான் அகதிகளின் துன்பநிலை


ஆக.11,2012. தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிவரும் தென்சூடான் அகதிகள், உதவி நிறுவனங்களின் போதிய நிதி உதவிகளின்றி பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஃபிதெஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கின்றது.
போதிய நிதிகள் இன்மையால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனைத்து பிறரன்புப் பணிகளையும் நிறுத்தி வைப்பதாக IOM எனும் குடியேற்றதாரர்களுக்கான அனைத்துலக அமைப்பு அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டும் இக்கத்தோலிக்க செய்தி நிறுவனம், அண்மையில் திரும்பி வந்துள்ள 16,000 தென் சூடான் அகதிகளும் பெரும் துயர்களை எதிர்நோக்குவதாகவும் அறிவித்துள்ளது.
புதிதாகச் சுதந்திரம் பெற்ற தென்சூடானுக்குள் இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை 1,16,000 தென்சூடான் மக்கள் அகதிகளாக சூடானிலிருந்து குடிபுகுந்துள்ளனர்.
புதிதாக்க் குடியேறியுள்ள மக்களுக்கு உதவ 4 கோடியே 50 இலட்சம் டாலர்கள் தேவைப்படுவதாக IOM அமைப்பு அறிவித்துள்ள வேளை, இதுவரை அதில் 12 விழுக்காடே கிட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.