குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய நிலையில் தமிழகம்
ஆக.11,2012. குழந்தைகள் பிறந்து முதல் ஆறு மாதத்திற்கு, முழுமையாக தாய்ப்பால் ஊட்டுவதில்,
இந்திய அளவில் தமிழகம் 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தகவலை
வெளியிட்டுள்ளது. நோய் தொற்றுகளை தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது,
தாயுடனான பிணைப்பைக் கூட்டுவது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிப்பது என,
குழந்தைக்குப் பல நன்மைகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, முதல் ஆறு மாதத்திற்கு, அவர்களுக்குத்
தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்துகின்ற போதிலும், தாய்ப்பால்
ஊட்டுவதில், இந்திய அளவில் தமிழகம், 20வது இடத்தில் உள்ளது என, ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதுகுறித்து,
எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் ஜெயா கூறும்போது, இந்திய அளவில், முதல்
ஆறு மாதம், முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் விகிதம், தமிழகத்தில், 33.3 விழுக்காடாக உள்ளது,
இது, தமிழகத்தில், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு முக்கிய
காரணமாக உள்ளது எனத் தெரிவித்தார்.