2012-08-11 16:43:58

இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் விசுவாச வெளிப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு


ஆக.11,2012. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தின் வெளிப்பாடு என அறிவித்துள்ளனர் கேரள ஆயர்கள்.
பெங்களூருவில் இவ்வெள்ளியன்று இடம்பெற்ற கேரள ஆயர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், இறைவனின் படைப்பை பாதுகாக்கவும், அதற்கேற்றாற்போல் நம் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்கவும் நம் விசுவாசம் அழைப்பு விடுக்கிறது என அவர்கள் கூறியுள்ளனர்.
மின்சக்தி பயன்பாடு மற்றும் கழிவகற்றும் திட்டங்களில் பல்வேறுப் பிரச்னைகளைச் சந்தித்து வரும் கேரளாவிற்கு, சூரிய சக்தி பயன்பாடு குறித்தும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் கூடிய கழிவுகளகற்றும் திட்டம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டியது ஆயர்களின் கடமை என, இவ்வெள்ளியன்று கூடிய 36 கேரள ஆயர்களும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து போதிப்பதோடு நிறுத்திவிடவில்லை, மாறாக ஆயர் இல்லங்களும் கத்தோலிக்க நிறுவனங்களும் சூரிய சக்தியைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன என்றார் கேரள ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Andrews Thazhath.








All the contents on this site are copyrighted ©.