2012-08-10 15:38:48

அகில உலக மண்ணின் மைந்தர்கள் நாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி


ஆக.10,2012. சமுதாய வானொலி முதல், கணணி வழித் தொடர்புகள் வரை, தற்காலத் தொடர்புக்கருவிகள் அனைத்தையும் மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்தி, தங்கள் குரலை உலகெங்கும் ஒலிக்கச்செய்கின்றனர் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஆகஸ்ட் 9, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அகில உலக மண்ணின் மைந்தர்கள் நாளையொட்டி, செய்தி வெளியிட்ட பான் கி மூன், உலகின் கண்களிலிருந்து பெரும்பாலும் மறைந்து வாழ்ந்த இம்மக்களும் தற்போது உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று கூறினார்.
"மண்ணின் மைந்தர்களின் குரல்களைச் சக்திபெறச் செய்தல்" என்ற மையக் கருத்துடன் இவ்வாண்டு கொண்டாடப்பட்ட இந்த அகில உலக நாள், 1994ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுக்குள் இம்மக்கள் முழு மனித மாண்படைய வேண்டும் என்பதே ஐ.நா.வின் இலக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை, அநீதி, பாகுபாடுகளுடன் நடத்தப்படுதல் என்ற பல வழிகளிலும் துன்புறும் இம்மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்புச் சாதனங்கள் பெருமளவு பயன்படுத்தப்படவேண்டும் என்று UNESCO தலைமை இயக்குனர் Irina Bokova கூறினார்.








All the contents on this site are copyrighted ©.