2012-08-09 16:20:01

மக்கள்பேறு நலம் பற்றிய ஒரு சட்டத்தை அமலாக்கும் பிலிப்பின்ஸ் அரசின் முயற்சிக்கு ஆயர்கள் எதிர்ப்பு


ஆக.09,2012. பிலிப்பின்ஸ் மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நாட்டின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டிருக்கும் போராட்டம் என்பதை அரசு உணரும் நேரம் வரும் என்று Jaro உயர்மறைமாவட்டப் பேராயர் Angel Lagdameo கூறினார்.
மக்கள்பேறு நலம் பற்றிய பிரச்சனைகள் நிறைந்த ஒரு சட்டத்தை அமலாக்கும் முயற்சியில் பிலிப்பின்ஸ் பாராளுமன்றம் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டுள்ளது. இச்சட்டத்தின் பல அம்சங்களை எதிர்த்து பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையும் தலத்திருஅவையும் குரல் கொடுத்து வந்துள்ளது.
திருஅவையின் எதிர்ப்புக்கு உரிய கவனம் செலுத்தாமல் அரசு செயல்படும் முறை குறித்து பேசிய பேராயர் Lagdameo, மக்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருக்கலைப்பு, கருத்தடை ஆகிய செயல்திட்டங்களை உள்ளடக்கிய இந்தச் சட்டவரைவை எதிர்த்து ஆயர் Gabriel Reyes தலைமையில் நடைபெற்ற ஒரு திருப்பலியில் 10,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.