கவிதைக்கனவுகள்–மரமாய் மாற வரம் வேண்டும்! கவிஞர் வைகைச் செல்வி
இறைவா! ஒரு வரம் வேண்டும் எனக்கு. மரமாய் மாற வரம் வேண்டும்!
அந்த மரத்தில் ஆயிரம்
கரங்கள் வரும்! எதற்கு ? … (கனிகள் பறிக்க) ஆயிரம் ஆயிரம் பூப் பூக்கும்! காக்கை,
குருவி தேடி வரும்! கவிதை சொல்லக் கூடு கட்டும்!
வெட்ட வெளியில் நின்றாலும், பட்ட
மரமாய் ஆனாலும், பூங்கதவாய் உருவெடுப்பேன்! வெட்ட வரும் மனிதனை விரட்டிப் பிடித்து உயரேத்
தொங்க விடுவேன்!
தென்றல் காற்றைத் தவழ விட்டு கொண்டல் தொட்டு மழை பெய்து, சுற்றுச்
சூழலைச் சீர் செய்வேன்! இறைவன் படைத்த பூமியிது! இதைத் தூசுபடுத்த, மாசுபடுத்த எவர்க்கு
மிங்கே உரிமை யில்லை!
மரத்தை வளர்த்திடுவாய், பரம்பொருள் கட்டளை இது வென்பேன்.