2012-08-04 14:43:20

ஆகஸ்ட் 04, 2012. கவிதைக் கனவுகள்......கவிமணியின் வாழ்க்கைத் தத்துவங்கள்


நாமே நமக்குத் துணையானால்,
நாடும்பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்;
சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ?

நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு,
நேயம் கொண்ட நெறியோர்க்கு,
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு
வெல்லும் படைகள் வேறுளவோ?

உள்ளந் தேறிச் செய்வினையில்
ஊக்கம் பெருக உழைப்போமேல்,
பள்ளம் உயர்மே டாகாதோ?
பாறை பொடியாய்ப் போகாதோ?







All the contents on this site are copyrighted ©.