2012-08-03 16:37:40

தாய்வான் தலத்திருஅவை பூர்வீக மக்கள் தினத்தைச் சிறப்பித்தது


ஆக.03,2012. தாய்வான் தீவு நாட்டின் பூர்வீக மக்கள் தினத்தை இப்புதனன்று சிறப்பித்தது அந்நாட்டுத் தலத்திருஅவை.
தாய்வானில் வாழும் ஏறக்குறைய 5 இலட்சம் பூர்வீக மக்களின் மரபுக் கலாச்சாரமும் மொழியும், திருமண வாழ்வும் பாதுகாக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்த ஆயர்கள், அம்மக்களில் இறையழைத்தல்கள் அதிகம் உருவாக வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
ஒவ்வொரு சமுதாயத்தின் தாய்மொழியானது அச்சமுதாய மக்களின் தனித்துவத்தைக் காட்டுகின்றது எனக் கூறிய ஆயர்கள், இந்தப் பூர்வீக மக்களின் வரலாறும் கலாச்சாரமும் விழுமியங்களும் பாதுகாக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
தாய்வானில் நூற்றாண்டளவாய் ஓரங்கட்டப்பட்டு வந்த இம்மக்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருவதையும் ஆயர்கள் அவ்விழாவில் சுட்டிக்காட்டினர்.







All the contents on this site are copyrighted ©.