ஆக.02,2012. அன்பர்களே, ஆகஸ்ட் 5, வருகிற ஞாயிறு பனிமய அன்னைமரி திருவிழா. தமிழகத்தில்
பனிமய மாதா என்றாலே தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம்தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும்.
முத்துக்குளித்துறை எனப் புகழ்பெறும் தூத்துக்குடி பனிமயமாதா திருவிழாத் தயாரிப்புக்கள்
11 நாள்கள் நவநாள் பக்தி முயற்சிகளுடன் நடைபெற்று வருகின்றன. 450 ஆண்டுகளுக்கு மேலாக
தஸ்நேவிஸ் மாதா என்று இந்தப் புதுமை மாதா தூத்துக்குடி மற்றும் பிற பகுதிகளில் போற்றப்பட்டு
வருகிறார். இவ்வன்னைமரியின் பெருமையைத் தொலைபேசி வழியாகப் பேசுகிறார் அருட்பணி ஜெரால்டு
ரவி. இவர் தூத்துக்குடி மறைமாவட்ட பவளம் கலைத்தொடர்பு நிலைய இயக்குனர்.