2012-08-02 15:41:54

நற்செய்தியைப் புதிய வழிகளில் பரப்புதல்: போலந்து நாட்டில் மாநாடு


ஆக.02,2012. நற்செய்தியைப் புதிய வழிகளில் பரப்புதல் என்பது குருக்களுக்கு மட்டும் விடுக்கப்பட்டுள்ள பணியல்ல, மாறாக, இப்பணியில் அனைத்து கிறிஸ்தவர்களும் இணைய அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
போலந்து நாட்டில் Kostrzyn எனும் நகரில் இச்செவ்வாய் முடிய நடைபெற்ற ஒரு மாநாட்டின் துவக்கத் திருப்பலியில் மறையுரையாற்றிய நற்செய்தியைப் புதிய வழிகளில் பரப்பும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Salvatore Fisichella இவ்வாறு கூறினார்.
நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில் போலந்தின் 350க்கும் மேற்பட்ட கத்தோலிக்க அமைப்புக்களிலும், குழுமங்களிலும் இருந்து வந்திருந்த 1200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இன்றைய உலகில் வாழும் மனிதர்களுக்கு நல்ல செய்திகள் சென்றடைய வேண்டும் என்பதை நாம் அனைவருமே உணர்கிறோம், எனவே எக்காலத்திற்கும் பொருளுள்ளதாக இருக்கும் நற்செய்தியை புதிய வழிகளில் பரப்புவது நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள அழைப்பு என்று பேராயர் Fisichella தன் மறையுரையில் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.