சிலோன் விவிலியக் கழகத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா
ஆக.02,2012. CBS என்றழைக்கப்படும் சிலோன் விவிலியக் கழகத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா
இலங்கையின் கொழும்புவில் இப்புதனன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் துவக்கத்தில்,
கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற நன்றி வழிபாட்டில் கத்தோலிக்க ஆயர்கள்,
குருக்கள், துறவியர், பொது நிலையினர், மற்றும் பிற கிறிஸ்தவ சபையினர் அனைவரும் கலந்து
கொண்டனர். பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த இலங்கையில் 1812ம் ஆண்டு சிலோன்
விவிலியக் கழகம் துவக்கப்பட்டது. விவிலியத்தை மொழிபெயர்ப்பு செய்தல், அச்சிடுதல், விநியோகம்
செய்தல் ஆகிய செயல்பாடுகளில் இக்கழகம் கடந்த 200 ஆண்டுகள் ஈடுபட்டுள்ளது. இவ்விழாவையொட்டி,
தமிழிலும் சிங்களத்திலும் 10,000 விவிலியப் பிரதிகளை விநியோகம் செய்யும் ஒரு திட்டத்தில்
இக்கழகம் தற்போது ஈடுபட்டுள்ளது.