2012-07-31 16:32:03

சிரியாவின் அகதிகளிடையே காரித்தாஸ் அமைப்பின் பணி


ஜூலை,31,2012. சிரியாவில் இடம்பெறும் மோதல்களால் இதுவரை இரண்டு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், அதில் ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் லெபனனில் குடியேறியுள்ளதாகவும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஜோர்டன் மற்றும் துருக்கியிலும்கூட எண்ணற்ற சிரியா நாட்டினர் அடைக்கலம் தேடியுள்ளதாகக் கூறும் காரித்தாஸ் அமைப்பு, லெபனன் எல்லையில் அகதிகளைத் தடுக்க, இராணுவத்தை நிறுத்த முயலும் லெபனன் அரசின் திட்டம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளது.
சிரியா நாட்டு அகதிகளிடையே லெபனன் நாட்டில் தன் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, உணவு மற்றும் உளரீதியான உதவிகளை வழங்குவதோடு, குழந்தைகளுக்கான நடமாடும் மருத்துவமனை ஒன்றையும் நடத்திவருகிறது.
ஜோர்டன் மற்றும் துருக்கியிலும் அகதிகளுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதோடு, சிரியாவில் இடம்பெயர்ந்து வாழும் மக்களிடையேயும் தன் சேவைகளை ஆற்றிவருகின்றது கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.







All the contents on this site are copyrighted ©.