2012-07-31 15:54:44

உலகின் பசியைப் போக்குவதற்கு கல்வியாளர்களின் முயற்சி தேவை - ஐ.நா


ஜூலை,31,2012. பசியைப் போக்குவதற்கான உலகளாவிய முயற்சியின் ஓர் அங்கமாக, கல்வியாளர்கள் குறுநில விவசாயிகளுக்கு உதவவும், கிராமப்புற ஏழ்மையைக் குறைப்பதற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் வேண்டுமென ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர் கேட்டுள்ளார்.
போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் கிராம சமூகவியல் குறித்து நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா.வின் FAO எனப்படும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத் தலைவர் José Graziano da Silva, கிராம மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அதனை மேம்படுத்துவதற்கு கல்வியறிவு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், சிறிய மற்றும் பெரிய உணவு உற்பத்தியாளர்கள் மத்தியில் போட்டிகளை நீக்குதல் உட்பட பசியைப் போக்குவதற்கான உலகளாவிய முயற்சியில் கல்வியாளர்கள் உதவுமாறு கேட்டுள்ளார் da Silva.







All the contents on this site are copyrighted ©.