2012-07-30 16:54:01

குழந்தைத் திருமணம் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும்


ஜூலை,30,2012. தமிழகத்தில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள், பெரிய அளவில் குறைந்துள்ளன. எனினும், இதை முற்றிலும் ஒழிக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த ஏழு மாதத்தில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடக்க இருந்த, 218 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன எனக் கூறும் சமூக நலத்துறை அதிகாரிகள், கடந்த ஆண்டில், 540; அதற்கு முந்தைய ஆண்டில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், குழந்தைத் திருமணங்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள போதிலும், இதை முற்றிலும் ஒழிக்க, தீவிர நடவடிக்கை தேவை என்ற கருத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்திலேயே, அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கும் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் மட்டும், 107 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.