2012-07-28 15:15:50

நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பங்கேற்ற போபால் சிறப்பு ஒலிம்பிக்ஸ்


ஜூலை,28,2012. இலண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியை போபால் நச்சுவாயுக் கசிவுக்கு காரணமான டவ் வேதிய நிறுவனம் ஸ்பான்சர் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போபாலில் நடத்தப்பட்ட சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில், நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற குழந்தைகள் பங்கேற்றனர்.
இலண்டன் ஒலிம்பிக் போட்டியை டவ் வேதிய நிறுவனம், மற்ற நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் உரிமையை இரத்து செய்ய வேண்டுமென்று போபால் மக்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த டவ் வேதிய நிறுவனத்தை இப்பொறுப்பிலிருந்து அகற்றுவதற்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் அமைப்பு மறுத்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போபாலில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன. இதில், போபால் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு உடல் ஊனமுற்ற நிலையில் பிறந்த குழந்தைகள் கலந்து கொண்டனர். முதலில் அணிவகுப்பும் அதைத் தொடர்ந்து நச்சுவாயுக் கசிவால் தொடரும் பாதிப்பை விளக்கும் நாடகமும் நடந்தன. இதைத் தொடர்ந்து சக்கர நாற்காலி போட்டி, நடைப்போட்டி, நண்டு நடை போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.







All the contents on this site are copyrighted ©.