கியூபா நாட்டு கிறிஸ்தவத் தலைவரின் மரணத்திற்குத் திருத்தந்தை அனுதாபத் தந்தி
ஜூலை,25,2012. கியூபா நாட்டில் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் தலைவராகப் பணிபுரிந்த Osvaldo
Paya ஜூலை 22, கடந்த ஞாயிறன்று விபத்தில் உயிரிழந்ததையடுத்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். Osvaldo Paya கிறிஸ்தவ விழுமியங்களைத்
தன் வாழ்வாலும், செயல்களாலும் பறைசாற்றிய நல்லதொரு தலைவர் என்று கூறியத் திருத்தந்தை,
அவர் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் தன் செபங்களையும், அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் வழங்குவதாக
Havana பேராயர் கர்தினால் Jaime Lucas Ortega அவர்களுக்கு அனுப்பிய இத்தந்தியில் கூறினார். Osvaldo
Payaவின் மரணம் கியூபா நாட்டுக்கு ஈடுசெய்யமுடியாத ஓர் இழப்பு என்று Santiago பேராயர்
Dionisio Garcia செய்தியாளர்களிடம் கூறினார். இந்த விபத்தைக் குறித்து அரசு விடுத்துள்ள
அறிக்கையில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை என்று Osvaldo Paya தலைமையேற்று நடத்திய கிறிஸ்தவ
விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம்
கூறியுள்ளது.