2012-07-24 15:27:56

கவிதைக் கனவுகள் - ஆறு கட்டளை


கவிஞர் கண்ணதாசனின் தத்துவ எண்ணங்களைத் தாங்கி வரும் கவிதை

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்தஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்







All the contents on this site are copyrighted ©.