2012-07-23 15:43:45

பெரு நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு


ஜூலை,23,2012. பெரு நாடு சுதந்திரமடைந்ததன் 191ம் ஆண்டு இவ்வார இறுதியில் சிறப்பிக்கப்பட உள்ளதையொட்டி, நாட்டின் அமைதி கலந்துரையாடலுக்கு சிறப்பு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்.
இம்மாதம் 28ம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள பெரு நாட்டு சுதந்திர தினத்தையொட்டி இத்திங்களன்று பத்திரியாளர்களைச் சந்தித்த பேராயர் Salvador Piñeiro, நாட்டில் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற, பெரு நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் சங்கிலித்தொடர் செபங்கள் இடம்பெறும் என்றார்.
Cajamarca உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சமுதாய முரண்பாடுகள் மற்றும் போராட்டங்கள் குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் பேராயர் Piñeiro.








All the contents on this site are copyrighted ©.