ஜூலை19,2012. அருட்பணி முனைவர் எரோணிமுஸ் அவர்கள் திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில்
26 ஆண்டுகள் விவிலியப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வராகவும்
பணியாற்றிய இவர் தற்போது வெள்ளமடம் அகஸ்தியமுனி குழந்தைகள் நல மையத்தின் இயக்குனராக இருந்து
வருகிறார். இந்த மையம் மற்றும் இறையடியார் மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் பற்றி இப்பொழுது
எமது வத்திக்கான் வானொலியில் பேசுகிறார்