2012-07-18 16:16:03

தமாஸ்கு நகர் மிகக் கடினமான காலத்தைச் சந்தித்து வருகிறது - திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari


ஜூலை,18,2012. சிரியாவின் தமாஸ்கு நகர் மிகக் கடினமான காலத்தைச் சந்தித்து வருகிறது. பகல் நேரங்களிலும் மக்கள் அச்சமின்றி நடமாட முடியவில்லை என்று தமாஸ்குவின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
சிரியாவில் ஆரம்பித்த போராட்டங்கள் இஞ்ஞாயிறு முதல் தலைநகர் தமாஸ்கு நகரை அடைந்துள்ளதால், அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே மிக உக்கிரமான சண்டைகள் நிகழ்வதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
இதுவரை இந்த சண்டைகள் மதத்திற்கு எதிராக நிகழவில்லை என்று தெளிவுபடுத்திய பேராயர் Zenari, கிறிஸ்தவத் துறவியரின் துயர் துடைப்புப் பணிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துவருகிறது என்று கூறினார்.
இதற்கிடையே, சிரிய அரசுத் தலைவருக்குக் கண்டனம் தெரிவிக்க ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு கொண்டுவந்த தீர்மானங்களுக்கு இரஷ்ய அரசும், சீன அரசும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது மும்முறை தோல்வியைக் கண்டது என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.