ஆப்ரிக்க, அமெரிக்க, கரிபியன் தீவுகளின் 12வது மேய்ப்புப்
பணி கருத்தரங்கிற்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி
ஜூலை,18,2012. மனிதர்களின் ஆழ்மனங்களில் எழும் கேள்விகளுக்கு இயேசு பதிலாக அமைகிறார்
என்பதைத் திருஅவை எடுத்துரைக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். ஜூலை
13 முதல் 20 முடிய Ecuador நாட்டின் Guayaquil நகரில் நடைபெற்று வரும் ஆப்ரிக்க, அமெரிக்க,
கரிபியன் தீவுகளின் 12வது மேய்ப்புப் பணி கருத்தரங்கிற்குத் தன் வாழ்த்துக்களை அனுப்பியத்
திருத்தந்தை இவ்வாறு கூறினார். திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே
அனுப்பியுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், ஆப்ரிக்க அமெரிக்க நாடுகளின் பழமை வாய்ந்த
வரலாறும், கலாச்சாரங்களும் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன என்று கூறியத் திருத்தந்தை,
இக்கலாச்சாரங்களின் மத்தியில் திருஅவையைத் தகுந்த வகையில் பிரசன்னமாக்குவது நமது கடமை
என்று கூறினார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆயர்கள்,
குருக்கள், துறவியர் மற்றும் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள பொதுநிலையினர் என 250க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டம் வருகிற வெள்ளியன்று நிறைவு பெறும்.