2012-07-17 16:27:51

புனிதபூமிக்கானத் திருப்பீடத் தூதர் : திருத்தந்தை வெளியிடவிருக்கும் அப்போஸ்தலிக்க ஏடு, அரசியல்ரீதியான திட்டத்தைக் கொண்டிருக்காது


ஜூலை17,2012. மத்திய கிழக்கு நாடுகளின் திருஅவைகளுக்கென வருகிற செப்டம்பரில் திருத்தந்தை வெளியிடவிருக்கும் அப்போஸ்தலிக்க ஏடு, அப்பகுதியின் மோதல்களுக்குத் தீர்வுகளை வழங்கும் அரசியல்ரீதியான திட்டத்தைக் கொண்டிருக்காது என்பதை நினைவுபடுத்தியுள்ளார் பேராயர் Antonio Franco.
இம்மாதத்தில் பணி ஓய்வு பெறும் புனிதபூமிக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Franco, Aid to the Church in Need என்ற ஜெர்மன் பிறரன்பு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு அக்டோபரில் மத்திய கிழக்கு நாடுகள் குறித்து வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர் மாமன்றத் தீர்மானத் தொகுப்பை வருகிற செப்டம்பரில் திருத்தந்தை லெபனன் நாட்டுக்கு மேற்கொள்ளும் திருப்பயணத்தில் வெளியிடுவார்.
இத்தீர்மானத் தொகுப்பு குறித்துப் பேசிய பேராயர் Franco, இந்த அப்போஸ்தலிக்க ஏடு குறித்த உண்மையான கூறை மக்கள் எதிர்நோக்குமாறு கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.