சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவது உடனடித் தேவை : ஹாங்காங்
கர்தினால்
ஜூலை14,2012. சீனாவில் வத்திக்கான் அங்கீகாரத்துடன் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஆயர் Thaddeus
Ma Daqinன் திருநிலைப்பாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்குச் சீனாவுக்கும்
வத்திக்கானுக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவது மிகவும் அவசரத் தேவையாக இருக்கின்றது என்று
ஹாங்காங் கர்தினால் John Tong Hon கூறினார். ஆயர் திருநிலைப்பாடுகளில் சீன அரசின்
தலையீட்டைக் குறை கூறியுள்ள கர்தினால் Tong, உரையாடல் வழியாக மட்டுமே இப்பிரச்சனைக்கு
நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என்று கூறினார் கடந்த வாரத்தில் திருநிலைப்படுத்தப்பட்ட
ஆயர் Thaddeus Ma Daqin, சீன அரசின் அங்கீகாரம் பெற்ற கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து
விலகிக் கொள்வதாக அறிவித்தார். ஆயினும், சீன அதிகாரிகள் அவரைத் தொடர்ந்து பணியில் வைத்துள்ளனர். அதேசமயம்,
திருத்தந்தையின் ஒப்புதலின்றி அருட்பணி Joseph Yue Fusheng கடந்த வாரத்தில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டிருக்கிறார்.