2012-07-13 16:12:48

ஜூலை 14, 2012. கவிதைக் கனவுகள்...... சமதர்மம் குறித்து கவிஞர் இராமலிங்கம் பிள்ளை


வானவெளி ஆராய்ச்சி மிகுந்து மேலும்
வகைவகையாய் விஞ்ஞானம் வளர்ந்தே அந்தப்
பானுவையே தொட்டுவரும் பாணம் ஏவிப்
பயணத்தில் முழுவெற்றி பலித்திட் டாலும்
ஆனஉயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்
ஆகுமென்ற மெய்யுணர்வை அளிக்க வல்ல
ஞானஒளி காணாத மனித வாழ்க்கை
நரகமென்று சொல்லுவதே ஞாய மாகும்.








All the contents on this site are copyrighted ©.