2012-07-13 16:12:22

அர்ஜென்டினா நாடு வலுவற்றோருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் : பேராயர் Arancibia


ஜூலை13,2012. மாபெரும் அர்ஜென்டினா நாடு வலுவற்றோருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பேராயர் José María Arancibia கேட்டுக் கொண்டார்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா சுதந்திரம் அடைந்ததன் 196வது ஆண்டு நிறைவை இம்மாதம் 9ம் தேதி சிறப்பித்த போது இவ்வாறு கேட்டுக் கொண்டார் பேராயர் María Arancibia.
மனிதன் பற்றிய அறநெறி உண்மைகளை ஏற்பது, சுதந்திரத்தை அடைவதற்கு அவசியமானது என்றுரைத்த பேராயர், ஒரு பெரிய நாடு போலியான கருத்துக்கோட்பாடுகளைச் சார்ந்திருக்க முடியாது, மாறாக, நலிந்தோருக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அக்கறை காட்ட வேண்டுமென்று வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.