வறுமையில் வாடும் குடும்பங்களுக்குக் கிடைக்கும் தினசரி ஊதியத்தை அதிகரிப்பதில் திருஅவை
வழிகாட்ட வேண்டும்
ஜூலை,12,2012 பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள இக்காலக்கட்டத்தில் வறுமையில் வாடும்
குடும்பங்களுக்குக் கிடைக்கும் தினசரி ஊதியத்தை அதிகரிப்பதில் திருஅவை வழிகாட்ட வேண்டும்
என்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று இலண்டனில் இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வறுமைக்கு
எதிரான திருஅவையின் செயல்பாடுகள் என்று பொருள்படும் Church Action on Poverty என்ற கத்தோலிக்க
பிறரன்பு அமைப்பு, அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தினசரி ஊதியம் வறியோரின் குடும்பங்களில்
நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்க போதுமானது அல்ல என்று இவ்வறிக்கையில் கூறியுள்ளது. அரசின்
குறைந்தபட்ச தின ஊதியத்தை விட அதிகமான ஊதியத்தைத் திருஅவை நிறுவனங்கள் வழங்கி, பிறருக்கு
எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது. குறைத்தபட்ச
ஊதியம் என்பதற்குப் பதில், வாழ்வதற்கான ஊதியம் என்ற அளவில் அனைத்து நிறுவனங்களும் தங்கள்
எண்ணங்களை மாற்றினால் வறியோரின் பல பிரச்சனைகள் தீரும் என்று Church Action on Poverty
அமைப்பின் உறுப்பினர் Alan Thornton கூறினார்.