மியான்மர் மீதான அமெரிக்கத் தடைகள் 15 ஆண்டுகளுக்குப் பின் நீக்கம்
ஜூலை,12,2012 மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பொருளாதார தடைகள்
நீக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளதற்கு எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi,
வரவேற்பு அளித்தார். அமெரிக்கா தன்னுடைய தொழிலதிபர்களிடம் இனி மியான்மரில் முதலீடு
செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த முடிவு ஒருவாரமாக அமெரிக்காவில் தங்கி பேச்சுவார்த்தை
நடத்திவரும் Suu Kyi முயற்சிக்கு கிடைத்த வெற்றி என ஊடகங்கள் கூறுகின்றன. இதுகுறித்து
அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் அரசுத்தலைவரும், Suu Kyiம்,
அந்நாட்டு மக்களும் குடியரசுப் பாதையில் தங்களின் பயணத்தை தொடங்கியுள்ளனர்; அரசும் பல
முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது என்று பாராட்டினார்.