2012-07-12 12:51:54

நேர்காணல் – இறையடியார் மறைசாட்சி தேவசகாயம்


ஜூலை12,2012. 300 ஆண்டுகளுக்கு முன்னர் தென் தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தின் நட்டாலம் என்ற ஊரில் பிறந்து அம்மறைமாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர் இறையடியார் தேவசகாயம். இவரை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கு கடந்த ஜூன் 28ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் ஒப்புதல் அளித்தார். எனவே வருகிற டிசம்பர் 2ம் தேதி இறையடியார் தேவசகாயம் அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலி நாகர்கோவிலுள்ள கோட்டாறில் நடைபெறும். புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கானத் திருப்பீட பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ இத்திருப்பலியை நிகழ்த்துவார் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிகழ்வையொட்டி கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.