கவிதைக்கனவுகள்....... வாழ்க்கை பற்றிய உண்மை - ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்
நான் வாழ்க்கையில் வெற்றியடைய கடவுளிடம் வலிமை கேட்டேன் - ஆனால் நான் தாழ்மையுடன்
பணிவைக் கற்றுக் கொள்வதற்காக.... நான் பலவீனனாக ஆக்கப்பட்டேன்
நான் அரும்பெரும்
காரியங்களைச் செய்வதற்காக நல்ல உடல்நலம் கேட்டேன் – ஆனால் நான் நேர்த்தியான காரியங்களைச்
செய்வதற்காக நான் நோயாளியாக்கப்பட்டேன்
நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காக செல்வங்களைக்
கேட்டேன் – ஆனால் நான் ஞானமுள்ளவனாக ஆவதற்காக நான் ஏழையாக்கப்பட்டேன்.
நான்
பிறரின் புகழ்ச்சிகளைப் பெறுவதற்காக அதிகாரத்தைக் கேட்டேன் – ஆனால் நான் கடவுளின்
தேவையை உணருவதற்காக நான் பலவீனன் ஆக்கப்பட்டேன்
நான் வாழ்வை அனுபவிப்பதற்காக
எல்லாப் பொருள்களையும் கேட்டேன் – ஆனால் நான் எல்லாவற்றையும் அனுபவிப்பதற்காக
எனக்கு வாழ்வு அளிக்கப்பட்டது
இந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர்
போக்கை இப்படிச் சித்தரிக்கிறது பகவத்கீதை வெண்பா நினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன்,
வேறொன்றை நினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ அதுவுண்டு இதுவுண்டு,
எது பெரிது எங்குண்டோ அதுவும் எனக்கே உடைமையாம் (16:13 ) எண்ணம் பல மனதில், என்றும்
ஒரே குழப்பம் மண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார் ஆழ்வர், இவர் காம அனுபவத்திற்
சிக்குண்பார் பாழ் நரகமே சம்பளம். (16: 16)