இந்தியாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்கும் பதியத்
திட்டத்திற்கு வரவேற்பு
ஜூலை,11,2012. இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு
இலவச மருந்துகள் வழங்கும் பதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பதை மக்கள் நல அமைப்புக்கள்
வரவேற்றுள்ளன. 27,000 கோடி ரூபாய் மதிப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தால்
6 இலட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் வாழும் மக்களும், 779 நகரங்களில் வாழும் மக்களும்
பயன்பெறுவர் என்று மத்திய நலத்துறை செயலர் P.K.Pradhan அறிவித்துள்ளார். மத்திய அரசு
வழங்கும் இத்திட்டத்தின் பயன்கள் மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கு, கத்தோலிக்க நலவாழ்வு
மையங்களை அரசு பயன்படுத்துவது அவசியம் என்று இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தின் தலைவரான
அருள்தந்தை Tomi Thomas, UCA செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார். இத்திட்டத்தின்
மூலம் பெரும் நிறுவனங்களின் பெயர்களைத் தாங்காத பல முக்கிய மருந்து வகைகள் மக்களுக்கு
இலவசமாகச் சென்றடைய வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. அதிக விலையில் மருத்துகளை
விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தைச் செயலிழக்கச்செய்யும் என்ற எச்சரிக்கையை
மக்கள் நல அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன.