ஜூலை10,2012. மெக்சிகோவில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வன்முறைகள் அதிகரித்து
வரும்வேளை, அந்நாட்டின் அமைதிக்காகச் செபித்தார் மெக்சிகோ நகர் பேராயர் கர்தினால் Norberto
Rivera Carrera. மெக்சிகோவில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் ஓட்டுகள் விலைக்கு
வாங்கப்பட்டன மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டன என்று ஒரு வேட்பாளர் குற்றம் சாட்டி வரும்வேளை,
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுக்கிடையே நிலவும் கருத்து முரண்பாடுகளை அமைதியான
முறையில் தீர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார் கர்தினால் Carrera. மெக்சிகோவில்
குருக்களுக்கு எதிரானப் போக்கைக் கொண்டிருந்து, நீண்டகாலம் ஆட்சியிலிருந்த நிறுவனப் புரட்சிக்
கட்சி, 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இத்தேர்தல்
முடிவுகள் தந்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.