2012-07-10 15:56:52

சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களைவிட அதிக அளவு நீரைப் பயன்படுத்துகிறார்கள் : பன்னாட்டுப் பிறரன்பு நிறுவனம் எச்சரிக்கை


ஜூலை10,2012. இந்தியா உட்பட வளரும் நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் சுத்த நீரின் அளவுக்கும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு இருப்பதாக பிரிட்டனை மையமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுப் பிறரன்பு நிறுவனம் எச்சரித்தது.
இந்தியாவின் கோவா மற்றும் கேரளா உட்பட சுற்றுலாப் பயணிகள் தங்கும் உலகின் புகழ்பெற்ற 5 கடற்கரை விடுதிகளில் அண்மையில் ஆய்வு நடத்திய இவ்வமைப்பு, சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களைவிட அதிக அளவு நீரைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துள்ளது.
உள்ளூர் மோதல்களும் வறுமையும் அதிகரிக்கவும் நோய்கள் பரவவும் இந்த நிலை காரணமாக அமைகின்றது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
Tanzania நாட்டு Zanzibarன் இரண்டு தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளில் பயன்படுத்தும் சுத்த நீரின் அளவு, உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவைவிட 16 மடங்குக்கும் அதிகம் என்று இவ்வமைப்பு கண்டுபிடித்துள்ளது.
இந்தச் சமத்துவமற்றநிலை களையப்படுவதற்கு அனைத்துலக சுற்றுலா நிறுவனமும், அரசுகளும், சுற்றுலா அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் இந்தப் பிரிட்டன் பிறரன்பு அமைப்பு கேட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.