ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற வலைதளத்தில், சொல்கேளான் ஏ.வி.கிரி எழுதிய கவிதை.
காலையில்
எழுந்து சுடச்சுட காபி குடிப்பதில் அவசரம்...
நுனிப்
புல்லாக செய்தி தாள்களையும் தொலைக்காட்சியையும் பார்த்து
முடித்து... குளியலறை ஓடி முகம் மழித்து குளித்து முடித்து நாலு
வாய் உண்டு முடிப்பதில் அவசரம்...
இடை இடையே கேள்வி
கேட்கும் மனைவி மக்களுக்கு பதில் சொல்லாமல் தலை அசைப்பதில் அவசரம்...
கிடைத்த
வாகனத்தில் ஏறி அலுவலகம் செல்வதில் அவசரம்...
கோப்புக்களைப்
பார்த்து முடிவு எடுப்பதிலும் கீழுள்ள ஊழியர்களைத் திட்டித்
தீர்ப்பதிலும் அவசரம்...
திருமண வீடுகளில் தலை காட்டி
வருவதிலும் துணி மணி எடுப்பதிலும் அவசரம்... அவசரம்...
மனித
வாழ்க்கையே அவசரம் என்றாலும் கண் மூடி அசையாமல் சவமாய் நாம்
படுத்திருக்கும்போது மற்றவர்கள்தான் அவசரப்படுகின்றனர்... "சீக்கரம்
எடுங்க ராகு காலம் வந்து விடும்!'