2012-07-10 15:57:50

அரசுசாரா நிறுவனங்களுக்கான உரிமத்தை இரத்து செய்வதற்கு தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோள்


ஜூலை10,2012. தமிழகத்திலுள்ள 90 அரசுசாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் இரத்து செய்யப்படுமாறு தமிழ்நாடு காவல்துறை நடுவண் அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இந்த விண்ணப்பக் கடிதம், தமிழக உள்துறை அமைச்சகம் வழியாக அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உரிமங்களைப் புதுப்பிக்கக் கோரி கடந்த மார்ச் வரை விண்ணப்பித்துள்ள 200க்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புக்களில் ஏறக்குறைய 90, அவை நிதிகளைச் செலவழிக்கும் முறையை வைத்து தகுதியற்றவைகளாக உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.
FCRA என்ற "வெளிநாட்டு உதவி விதிமுறையின்கீழ்" இந்தியாவில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ள அரசுசாரா நிறுவனங்கள் உள்ளன.







All the contents on this site are copyrighted ©.