Dibrugarh ஆயர் : அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தேவை
ஜூலை10,2012. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக
பெண்களுக்கும் சிறாருக்கும் அனைத்துவிதமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று Dibrugarh ஆயர்
Joseph Aind கூறினார். ஏறக்குறைய 5 இலட்சம் மக்கள் அகதிகள் முகாம்கள், கூடாரங்கள்,
மற்றும் திருஅவை நிறுவனங்களில் தங்கியிருக்கின்றனர் என்றுரைக்கும் ஆயர் Aind, இம்மக்கள்
மாண்புடன் வாழவேண்டிய தேவை உள்ளது என்று கூறினார். வீடுகள், விளைச்சல்கள், மரங்கள்,
விலங்குகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவர்களுக்குத் தேவையான
கொசுவலைகள், உணவுப் பொருள்கள், கூடாரங்கள், மருந்துகள் போன்றவற்றை மறைமாவட்டமும் அரசுசாரா
அமைப்புகளும் கொடுத்து வருகின்றன.